1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 4 மே 2022 (22:58 IST)

கடைசி வாய்ப்பை நழுவ விட்ட சிஎஸ்கே: புள்ளிப்பட்டியலில் முன்னேறிய பெங்களூரு

RCB
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச முடிவு செய்தார்
 
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி சென்னை அணிக்கு 174 ரன்கள் என்ற இலக்கை கொடுத்துள்ளது. பெங்களூர் அணியின் விராட் கோலி மற்றும் டூபிளஸ்சிஸ் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர் 
 
இந்த நிலையில் 174 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. எனவே இந்த தொடரில் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை சென்னை அணி இழந்தது.
 
இருப்பினும் பெங்களூரு அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதால் 4வது இடத்திற்கு முன்னேறியது.