1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 அக்டோபர் 2021 (20:20 IST)

பஞ்சாப் அணி சூப்பர் வெற்றி: ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்தது!

இன்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டியின் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து அந்த அணி அடுத்த சுற்றான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. வெங்கடேச ஐயர் 67 ரன்களும் திரிபாதி 34 ரன்களும் எடுத்தனர் 
 
இதனையடுத்து பஞ்சாப் அணி 166 என்ற இலக்கை நோக்கி விளையாடியது. கேப்டன் ராகுல் மிகவும் பொறுப்புடன் விளையாடி 67 ரன்கள் அடித்தால் 40 ரன்கள் எடுத்த நிலையில் 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்த பஞ்சாப் அணி வெற்றி பெற்றது 
இந்த வெற்றியின் மூலம் அந்த அணி தற்போது புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது என்பதும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடதக்கது ஆட்டநாயகன் விருதை கே.எல்.ராகுல் பெற்றார்