வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (09:43 IST)

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை!

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரான்ஸில் கோலாகலமாக நடந்து முடிந்தது. அதை தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் தொடங்கியுள்ளது. செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டிகளில் 184 நாடுகளை சேர்ந்த 4,400 மாற்றுத் திறனாளி வீர, வீராங்கனைகள் போட்டியிடுகின்றனர்.

இந்த போட்டிகளில் இந்தியா சார்பில் 32 பெண் வீராங்கனைகள் உட்பட 84 பேர் கலந்து கொள்கிறார்கள். கடந்த வாரம் இந்த போட்டிகள் தொடங்கிய நிலையில் தற்போது தமிழக வீராங்கனை நிதயஸ்ரீ சிவன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

பேட்மிண்ட்டன் வீராங்கனையான நித்யஸ்ரீ இந்தோனேஷியா வீராங்கனையான ரினா மர்லினாவை 21-14, 21-16 ஆகிய செட் கணக்குகளில் வென்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். ஏற்கனவே தமிழக வீராங்கனைகளான துளசிமதி மற்றும் மனிஷா ஆகியோர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.