1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (08:53 IST)

ஐசிசி சாம்பியன் ஆஃப் த மந்த்… தட்டிச் சென்ற ரிஷ்ப் பண்ட்!

ஐசிசி மாதந்தோறும் விருதுகளை அளிக்க உள்ளதாக அறிவித்த நிலையில் முதல் மாதத்துக்கான விருதை ரிஷப் பண்ட் தட்டிச் சென்றுள்ளார்.

சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இப்போது புதிய முன்னெடுப்பாக இனிமேல் விருதுகளை மாதம் தோறும் வழங்க உள்ளது. இதற்கான வீரர்கள் பரிந்துரையை ரசிகர்கள் ஆன்லைன் மூலமாக செய்யலாம் என அறிவுறுத்தியுள்ளது. இந்த விருதுகள் மாதம்தோறும்  முதல் திங்கள் கிழமை அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் விருதுக்காக இந்திய அணியைச் சேர்ந்த ரிஷப் பண்ட், அஸ்வின், நடராஜன் மற்றும் சிராஜ் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தன.

இந்நிலையில் இப்போது முதல் விருது இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய தொடரில் நெருக்கடியான நிலையில் களமிறங்கிய சிறப்பாக விளையாடிய அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.