வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 16 செப்டம்பர் 2017 (05:42 IST)

உலக லெவன் அணியை தோற்கடித்து தொடரை வென்றது பாகிஸ்தான்

பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில வருடங்களாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது உலக லெவன் அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையே மூன்று டி-20 போட்டிகள் நடைபெற்றன. இதில் தலா இரு அணிகளும் ஒரு வெற்றியை பெற்றிருந்த நிலையில் நேற்று நடந்த 3வது போட்டியில் பாகிஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது



 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 183 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய உலக லெவன் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பாகிஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரையும் கைப்பற்றியது
 
இந்த போட்டியின் நாயகனாக அகமது சேஜாட் மற்றூம் தொடர் நாயகனாக பாபர் அசாம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.