1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 4 ஏப்ரல் 2022 (16:27 IST)

கடைசி போட்டி முடிந்தவுடன் கண்ணீருடன் விடை பெற்ற கிரிக்கெட் வீரர்!

கடைசி போட்டி முடிந்தவுடன் கண்ணீருடன் விடை பெற்ற கிரிக்கெட் வீரர்!
கடைசி போட்டி முடிந்தவுடன் கண்ணீருடன் நியூசிலாந்து வீரர் ஒருவர் ரசிகர்களிடம் இருந்து விடைபெற்றார். 
 
நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் சமீபத்தில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். 38 வயதான இவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக சமீபத்தில் அறிவித்தவுடன் அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது
 
இந்த நிலையில் இன்று நெதர்லாந்து அணிக்கு எதிராக கடைசி போட்டியில் விளையாடி ராஸ் டெய்லர் 16 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து அவர் மைதானத்தில் இருந்து வெளியேறும் போது கண்ணீருடன் விடைபெற்றார்
 
மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளில் அவர் 15,000 ரன்களுக்கு மேல் குவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது