வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 19 ஜூன் 2021 (15:39 IST)

டாஸ் வென்ற நியுசிலாந்து பேட்டிங்… இந்தியா நிதானத் தொடக்கம்!

மழைக் காரணமாக நேற்று கைவிடப்பட்ட போட்டி இன்று தொடங்கியுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் மோத உள்ளன. உலகின் புகழ் பெற்ற மைதானமான இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் இந்த போட்டி தொடங்க இருந்த நிலையில் மழைக் காரணமாக முதல்நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

இதையடுத்து 23 ஆம் தேதி இறுதிநாளாக சேர்த்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்றாவது போட்டி தொடங்குமா அல்லது மழை குறுக்கிடுமா என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில் அப்படி எதுவும் நடக்காமல் போட்டி திட்டமிட்ட படி தொடங்கியது. இதையடுத்து டாஸ் வென்ற நியுசிலாந்து அணி பேட் செய்ய முடிவெடுத்தது. களமிறங்கிய இந்திய அணி சற்று முன்புவரை விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் சேர்த்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் நிதானமான தொடக்கத்தை ஆரம்பித்துள்ளனர்.