ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (22:05 IST)

வெள்ளி வென்ற வீராங்கனை பதக்கத்தை ஏலம் விட்டார். எஸ்பி அர்ஜூன் சரவணன் வாழ்த்து!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற வீராங்கனை தனது 8 மாத குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக தான் வென்ற பதக்கத்தை ஏலம் விட்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சமீபத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மரியா என்ற வீராங்கனை வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த நிலையில் அவர் தனது 8 மாத குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக அந்த பதக்கத்தை ஏலம் விட்டார். இதுகுறித்து எஸ்பி அர்ஜுன் சரவணன் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
 
செல்வத்து பயனே ஈதல்.
 
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற வீராங்கனை மரியா, ஒரு 8 மாத குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக தன் பதக்கத்தை ஏலம் விடுகிறார். ஒரு போலந்து நிறுவனம் ஏலம் எடுத்து,பின் அவரது முயற்சியை பாராட்டி பதக்கத்தை திருப்பி கொடுத்தது. 
 
மனிதம் மலரட்டும்.