1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (17:39 IST)

வருத்தப்பட நேரமில்லை… அடுத்த இலக்கு வெண்கலம்- இந்திய ஹாக்கி அணி கேப்டன்!

வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் கவனம் செலுத்துவதுதான் அடுத்த இலக்கு என மன்ப்ரீத் சிங் கூறியுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இன்று இந்தியா மற்றும் பெல்ஜியம் ஆகிய அணிகளுக்கு இடையே அரையிறுதி போட்டி நடந்த நிலையில் இந்தியா 2-5 என்ற கணக்கில் தோற்றது. தங்கப்பதக்கம் என்ற ஆசையில் இருந்த இந்திய ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

இதுபற்றி பேசியுள்ள இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங் ‘வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கத்துடன் களமிறங்கினோம். ஆனால் முடியவில்லை. இப்போதைக்கு தோல்வி குறித்து வருத்தப்படவோ மனம் வருந்தவோ நேரமில்லை. அடுத்த இலக்கு வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் மட்டுமே உள்ளது’ என நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசியுள்ளார்.