1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. India scored 204 runs in day 1

ஓவல் டெஸ்ட்: இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்… முதல் நாளில் இங்கிலாந்து ஆதிக்கம்!

இந்தியா
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சியளிக்கும் விதமாக ஜெய்ஸ்வால் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த வீரர்களும் பெரிய இன்னிங்ஸ்களை கட்டமைக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்
.
கருண் நாயர் மட்டும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்து அவுட் ஆகாமல் களத்தில் உள்ளார்.  முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 204 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்ஸன் மற்றும் ஜோஷ் டங் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கிறிஸ் வோக்ஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்டத்தின் இடையே மழைக் குறுக்கிட்டதால் கிட்டத்தட்ட 25 ஓவர்கள் நேற்று குறைவாக வீசப்பட்டது.
About Writer
vinoth