செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 26 ஜூலை 2025 (16:05 IST)

பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம்: முன்னாள் வீரர் கருத்து!

பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம்: முன்னாள் வீரர் கருத்து!
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அடிக்கடி காயங்களால் பாதிக்கப்படுவதால், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைப் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தியா - இங்கிலாந்து இடையே டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், இதில் பும்ரா தனது சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அவருக்குக் காயங்கள் ஒரு தொடர்ச்சியான பிரச்சனைகளாக இருந்து வருவதாகவும், உடல் ரீதியாக கடினமான பாதிப்பை அவருக்கு ஏற்படுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
முகமது கைப் இது குறித்துக் கூறுகையில், "நான் நினைக்கிறேன், அவர் அநேகமாக ஓய்வு பெறக்கூடும். அவர் தனது காயங்களுடன் போராடி வருகிறார். இயல்புக்கு மாறாக மெதுவாக பந்துவீசுகிறார். இந்த டெஸ்ட் போட்டியில் அவர் தன்னுடைய முழு வேகத்தையும் காட்டவில்லை," என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், "அவர் தனது பந்துவீச்சை 100% வழங்க முடியவில்லை என்றால், விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை என்று உணர்ந்தால், அவர் தானாகவே ஓய்வு பெற்றுவிடுவார் என்று எனது உள்ளுணர்வு கூறுகிறது," என்றும் முகமது கைப் குறிப்பிட்டுள்ளார்.
 
அவரது இந்தக் கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran