தொடர்புடைய செய்திகள்
- முதல் 4 பேட்ஸ்மேன்களும் அரைசதம்.. வலுவான நிலையில் இங்கிலாந்து.. ஜோ ரூட் சாதனை..!
- ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு மாற்று வீரர்.. இரண்டு வீரர்கள் பரிசீலனை!
- கால் காயத்துடன் பேட்டிங் செய்ய வந்த ரிஷப் பண்ட்… standing Ovation கொடுத்த ரசிகர்கள்!
- இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் அபார ஆட்டம்.. விக்கெட் எடுக்க முடியாமல் திணறிய இந்தியா..!
- ஒரே ஓவரில் 2 விக்கெட்.. 8 விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா.. பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுக்கள்..
மூன்றாம் நாள் ஆட்டம்: ஜோ ரூட் அபார சதம்… வலுவான நிலையில் இங்கிலாந்து!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பரபரப்பாக மான்செஸ்டரின் ஓல்ட் ட்ரஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்த மைதானத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க திணற, ஆனால் இங்கிலாந்து அணி எளிதாக ஓவருக்கு 4 ரன்கள் வீதம் எடுத்து விளையாடி வருகிறது. தற்போது ஆடிவரும் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் 7 விக்கெட்களை இழந்து 544 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் 150 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 188 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது. தற்போது களத்தில் இங்கிலாந்து அணிக் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 77 ரன்களுடனும் லியாம் டாவ்சன் 23 ரன்களோடும் விளையாடி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்