1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Bala
Last Updated : வெள்ளி, 17 ஜூலை 2015 (18:18 IST)

ஜிம்பாப்வே அணிக்கு 179 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

ரகானே தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டி தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகள் மோதும் இரண்டு 20 ஓவர் போட்டி தொடரில் முதல் போட்டி இன்று ஹராரேவில் நடக்கிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக உத்தப்பா 39 ரன்கள், முரளி விஜய் 34 ரன்கள்,ரஹானே 33 ரன்கள் எடுத்தனர். 
 
ஜிம்பாப்வே சார்பில் கிறிஸ்போஃபு 3 விக்கெட்டுகள், கிரீமர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.