வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 17 நவம்பர் 2018 (20:08 IST)

சேவாக் இல்லை என்றால் நான் இல்லை ! வீரர் உருக்கம்...

இந்தியாவில் ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிவரும் அர்மான் ஜாபர் என்பவர் தான் ஐ.பி.எல்.தொடர்களில் விளையாடக் காரணமே சேவாக் தான் என கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:
 
சில வருடங்களுக்கு முன் முழங்காலில் அடிபட்டு விளையாட முடியாமல் மிகவும் சிரமத்துடன் இருந்தேன்.
 
அப்போது மும்பையில் ஒரு ஹோட்டலில் சேவாக்கை சந்தித்தேன்.என்னை நலம் விசாரித்து விட்டு உடனே என் திறமையை அங்கீகரித்து ஏன் இங்கு இருக்கிறாய்..? என்று கேள்வி கேட்டுவிட்டு உடனே அவருடைய போனை எடுத்து பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு போன் போட்டு அங்கு சேர்வதற்காக என்னை  சிபாரிசு செய்தார்.
 
அதன் பின் வாழ்க்கையே மாறிவிட்டது அதனால் சேவாக்கிற்கு எனது நன்றிகள் இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.