செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 17 ஜூலை 2018 (16:52 IST)

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.

 
இந்திய அணி இங்கிலந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது. தற்போது ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.
 
முதலாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் படுதோல்வி அடைந்தது. இன்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் உள்ளது.
 
இன்று நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி பொட்டியில் வெற்று பெறும் அணி தொடரை கைப்பற்றும். இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.
 
அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.