வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 3 ஜூலை 2021 (15:23 IST)

பேட்ஸ்மேன்கள் தங்கள் பேட்களை விரும்புவதில்லை… தினேஷ் கார்த்திக் சொன்ன கதை!

இங்கிலாந்தில் இப்போது இலங்கை அணிக்கு எதிராக நடந்து வரும் போட்டிகளில் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.

இந்திய அணியில் மிக நீண்ட காலமாக தனக்கான இடத்துக்காக போராடியவர் தினேஷ் கார்த்திக். ஆனால் தோனியின் வரவால் தொடர்ச்சியான வாய்ப்புகளைப் பெறுவதில் அவருக்கு சிக்கல் எழுந்தது. இதனால் அவ்வப்போது இடம் கிடைப்பதும், பின்னர் அணிக்கு வெளியே உட்கார வைக்கப்படுவதாகவும் இருந்தார்.

ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்களில் இவரும் ஒருவர். இப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் இப்போது இங்கிலாந்தில் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் வர்ணனையாளராக பணியாற்றினார். அப்போது அவரின் வர்ணனைகள் ரசிகர்களையும் சக வர்ணனையாளர்களையும் கவர்ந்துள்ளன.

அவற்றில் முக்கியமாக ‘பேட்ஸ்மேன்கள் எப்போதும் தங்கள் பேட்களை விரும்புவதில்லை. சக வீரர்களின் பேட்களைதான் விரும்புகிறார்கள். பேட்கள் எப்போதுமே பக்கத்து வீட்டுக்காரரின் மனைவியை போன்றது’ எனக் கூறியுள்ளார்.