தொடர் மழை எதிரொலி.. சாம்பியன்ஸ் டிராபி இன்றைய போட்டி ரத்து..!
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத இருந்தன.
இந்த நிலையில், போட்டி நடைபெறும் ராவல்பிண்டி மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை தொடர்ந்ததால், இன்று நடைபெற இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் விளைவாக, தென்னாப்பிரிக்கா அணி மூன்று புள்ளிகளுடன் மற்றும் ஆஸ்திரேலியா அணி மூன்று புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
இந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால், அடுத்த சுற்றுக்கு செல்லும் அணிகள் ரன் ரேட் விகிதத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியா அணி 28ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியுடன் மோத உள்ளது. அதேபோல், மார்ச் 1ஆம் தேதி தென்னாப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதும்.
Edited by Siva