1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rohith Sharma and mohammed shami affected by ham string

அடுத்தடுத்து இரண்டு போட்டிகள்… இந்திய அணியில் இரு வீரர்களுக்கு தசைபிடிப்பு!

இந்திய அணி
இந்திய அணி நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளையும் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி போட்டிகள் மட்டும் துபாயில் நடப்பதால் அங்குள்ள சூழல் இந்திய அணியினருக்கு சில இடர்ப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் குறுகிய இடைவெளியில் இரண்டு போட்டிகளை ஆடியதால் இந்திய அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இந்திய அணிக்கு அடுத்த போட்டி மார்ச் 2 ஆம் தேதிதான் என்பதால் கிட்டத்தட்ட ஒரு வாரம் ஓய்வு கிடைத்துள்ளது. இந்த ஒரு வாரத்தில் அதிகமாக பயிற்சியில் ஈடுபடாமல் வீரர்கள் ஓய்வெடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
மகளிர் பிரீமியர் கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் பெங்களூரு அணி தோல்வி..!