1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 21 நவம்பர் 2022 (19:04 IST)

ஏடிபி டென்னிஸ் தொடர்: ஜோகோவிச் 6 முறையாக பட்டம் வென்றார்!

Novak Djokovic
உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்கள் பங்கேற்ற  ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், செர்பிய வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்றுள்ளார்.

உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில், முததல் 8 இடங்களில் உள்ள ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் இத்தாலி நாட்டில் உள்ள துரின் நகரில் நடந்ததது.

இதன் இறுதிப் போட்டியில், செர்பிய வீரர் ஜோகோவிச், நார்வேயின் கார்ஸ்பர் ரூட்டுடன் மோதினார்.

இன்றைய முதல் செட்டில், 7-5 , இரண்டாவது செட்டில் 6-3 , என்று அதிரடி காட்டிய ஜொகோவவிச் இப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜோகோவிச் 7 ஆண்டிற்குப் பிறகு இந்த ஏடிபி பைனல்ஸ் தொடரில் பட்டம் வென்றதார். இதன் மூலம் இவர் 6 வது முறையாக அவர் இப்படத்தை வென்றுள்ளார்.

இப்போட்டியில் வென்றதன் மூலம் அவருக்கு ரூ.39 கோடி பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj