1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 13 அக்டோபர் 2022 (16:06 IST)

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட்: ஒரே ஒரு ரன்னில் பாகிஸ்தான் தோல்வி!

srilankan women
ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட்: ஒரே ஒரு ரன்னில் பாகிஸ்தான் தோல்வி!
ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று நடைபெற்ற நிலையில் பாகிஸ்தான் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்றது
 
ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் இரண்டாவது அரையிறுதி போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்றது.
 
இந்தப் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் 122 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது
 
இதனால் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டியில் வரும் 15ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran