1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 4 ஜனவரி 2022 (15:17 IST)

அவர்களை நீக்கினால் கோலியையும்தான் நீக்கவேண்டும்…. ஆஷிஷ் நெஹ்ரா!

இந்திய டெஸ்ட் அணியின் மூத்த வீரர்களான கோலி, புஜாரா மற்றும் ரஹானே ஆகிய மூவரும் கடந்த இரண்டு வருடங்களாக சொதப்பி வருகின்றனர்.

நியுசிலாந்து தொடருக்கு பின்னரே ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரையும் நீக்கவேண்டும் என்று குரல்கள் எழுந்தன. ஆனால் கேப்டன் கோலி மற்றும் டிராவிட் ஆதரவால் இருவரும் தென் ஆப்பிரிக்கா தொடருக்கு சேர்க்கப்பட்டனர். ஆனாலும் அவர்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் சொதப்பி வருகின்றனர்.

இதையடுத்து இப்போது மறுபடியும் அந்த குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன. இதுபற்றி பேசியுள்ள ஆஷிஷ் நெஹ்ரா ‘புஜாரா மற்றும் ரஹானேவை நீக்கவேண்டும் என்று சொல்பவர்கள் ஏன் அதே பார்மில் இருக்கும் கோலியைப் பற்றி பேசுவதில்லை. ஏனென்றால் அவர் அணியின் கேப்டன். மேலும் அவர் இவர்களுக்கு மேலாக எதையோ செய்துள்ளதாக நம்புகின்றனர். அதே போல மற்ற இருவரும் கூட அணிக்காக பங்களித்துள்ளனர். அவர்கள் இப்போது அணிக்கு சிக்கலாக இருக்கிறார்கள் என்பதை மறுக்கவில்லை. ஆனால் தொடரின் இடையில் இரு மூத்த வீரர்களை நீக்குவது நல்ல பயனை தராது’ எனக் கூறியுள்ளார்.