வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 14 ஜனவரி 2019 (08:37 IST)

பந்துவீச்சில் சந்தேகம் – அம்பாத்தி ராயுடுவுக்கு சோதனை !

சர்ச்சைக்குரிய விதத்தில் பந்து வீசிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அம்பாத்தி ராயுடுவை சோதனைக்கு உட்படுத்தக் கூறியுள்ளது ஐசிசி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது இந்தியாவின் பகுதி நேரப் பந்து வீச்சாளரான அம்பாத்தி ராயுடு இரண்டு ஓவர்கள் வீசினார். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் மணிக்கட்டை சுழற்றுதல் மற்றும் பந்தை எறிதல் ஆகிய ஆகிய விதிமுறைகளை மீறியதாகக் கூறி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டினால் அவர் தன்னை 14 நாட்களுக்குள் தன்னை சோதனைக்குட்படுத்தி தனது பந்துவீசும் முறையில் எந்த விதிமீறலும் இல்லை என நிரூபிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

ஆனால் அதுவரையில் போட்டிகளில் விளையாடவும் ஒஅந்து வீசவும் தடையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை அவரது  பந்துவீச்சில் வீதிமீறல் இருப்பின் அவருக்கு பந்துவீசத் தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்காப்படுகிறது.

ஏற்கனவே இலங்கையின் முத்தையா முரளிதரன், பாகிஸ்தானின் சயித் அஜ்மல் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் சுனில் நரேன் ஆகியோர் மீதும் இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.