வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

தெய்வங்களுக்கு இந்த பொருட்களில் அபிஷேகம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்.....!!

அபிஷேகம் இறையருளைப் பரிபூரணமாகப் பெற்றுத் தரும். அபிஷேக தெய்வ மூர்த்தங்களிலிருந்து அளவிட முடியாத ஆற்றல் வெளிப்படும். அபிஷேகத்தின்போது ‘ஓம்’ என்று தொடங்கி குருக்கள் சொல்லும் மந்திரம் தெய்வ விக்கிரகங்களை அடைந்து மீண்டும் பகதர்களிடம்  சேர்கிறது.
மஞ்சள் பொடி: மஞ்சள் பொடியில் அபிஷேகம் செய்தால் ராஜ வசியம் கிடைக்கும். அதாவது அரசாங்க அனுகூலம் கிடைக்கும்.
 
திரு மஞ்சன பொடி: திரு மஞ்சன பொடியில் அபிஷேகம் செய்தால் கிரக தோஷம் நீங்கும்.
 
அரிசி மாவு: அரிசி மாவில் அபிஷேகம் செய்தால் கடன் பிரச்சனை விலகும்.
 
சந்தனாதி தைலம்: வயிறு வலி பிரச்சனையில் அவதிப்படுபவர்கள், சந்தனாதி தைலம் அபிஷேகம் பண்ணுவது நல்லது. ஏனென்றால் சந்தனாதி தைலம் அபிஷேகம் செய்தால் வயிறு உபாதை நீங்கும்.
 
பஞ்சாமிர்தம்: பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்தால் செல்வம் செழித்தோங்கும்.
 
தேன்: தேனில் அபிஷேகம் செய்தால் நல்ல சரீரம் கிடைகும். மேலும் குரல் வளம் பெருகும்.
 
நெய்: நெய் அபிஷேகம் செய்பவர்களுக்கு மோட்சத்தை கொடுக்கும்.
 
பால்: ஆயுள் விருத்தி உண்டாக வேண்டுமென்றால் பால் அபிஷேகம் செய்யுங்கள்.
 
தயிர்: பிள்ளை பாக்கியம் பெற தயிர் அபிஷேகம் செய்யுங்கள்.
 
சாத்துக்குடி: துன்பம் இல்லாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது. ஆகவே துன்பம் விலகி இன்பத்துடன் வாழ வேண்டுமானால் சாத்துக்குடி  அபிஷேகம் செய்து வாருங்கள்.
 
ஆரஞ்சு: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. இந்த பழமொழிக்கு ஏற்ப நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழவேண்டுமானால் ஆரஞ்சு அபிஷேகம் பண்ணுங்கள்.
 
கரும்பு சாறு: உங்கள் உடல் நலம் காக்க பட வேண்டுமானால் கரும்புச்சாறு அபிஷேகம் பண்ணுவது சிறந்தது.
 
எலுமிச்சம் பழம்: எலுமிச்சம் பழம் அபிஷேகம் செய்து வந்தால் எம பயம் நிவிர்த்தியாகும்.
 
இளநீர்: உயர்ந்த பதவியை விரும்பாதகவர்கள் ஒருவரும் இருக்க முடியாது .உங்களுக்கு நல்ல பதவி கிடைக்க வேண்டுமென்றால் இளநீர்  அபிஷேகம் செய்யுங்கள்.
 
நெல்லி பொடி: நெல்லி பொடி அபிஷேகம் செய்தால் ரோகத்தை போக்கும்.
 
பன்னீர்: மன அமைதியுடன் சந்தோஷமாக வாழ வேண்டுமானால் சந்தோஷத்தை கொடுக்கும் பன்னீர் அபிஷேகம் செய்யுங்கள்.
 
சந்தனம்: சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தால் கீர்த்தியை கொடுக்கும்.