வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: வியாழன், 13 பிப்ரவரி 2020 (14:33 IST)

உதவி கேட்டு 108 -க்கு அழைத்த வாலிபர்....அலட்சியம் காட்டிய ஊழியர்கள் !

உதவி கேட்டு 108 -க்கு அழித்த வாலிபர்....அலட்சியம் காட்டிய ஊழியர்கள்

தமிழகத்தில் அவசர மருத்துவ உதவிக்கு  108 என்ற ஆம்புலன்ஸ் சேவை இருந்து வருகிறது. இதன் வாயிலாகப் பலரும் விபத்திலும் ஆபத்திலும் இருந்து உயிர் பிழைத்து வருகின்றனர். 
 
ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கணேஷ்குமார்  இரண்டு நாட்களுக்கு முன்பு வலிப்பு நோயால் உயிருக்கு போராடிய நிலையில்  108 ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டு உதவிக்கு அழைத்தும் ஊழியர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர். அதனால் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
 
இளைஞரின் மறைவுக்குப் பிறகுதான் அவரது செல்போனில் இந்த அழைப்பு பதிவாகி இருப்பது தெரியவந்தது. கணேஷ்குமார் இறப்பதற்கு முன் பேசிய ஆடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது.