தொடர்புடைய செய்திகள்
- சென்னை - மதுரை தேஜஸ் ரயில் திண்டுக்கல்லில் நிற்கும்: ரயில்வே துறை தகவல்
- இரண்டே மாதத்தில் குஜராத்தில் எய்ம்ஸ்.. 2 ஆண்டுகளாக கண்டுக்கொள்ளப்படாத மதுரை!
- தடுப்பூசி வந்துட்டுன்னு ஜாலியா திரிய கூடாது! – மத்திய அமைச்சர் எச்சரிக்கை!
- மதுரை தோப்பூர் எய்ம்ஸ்: நிதியளவை கூட்டியது ஜப்பான் நிறுவனம்!
- 50 வருட பழமையான கட்டிடம் இடிந்து 3 பேர் பலி !!
மதுரை எய்ம்ஸ் தாமதத்திற்கு ஜப்பான் தான் காரணம்: மத்திய அமைச்சர்!
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிலையில் அது குறித்த பணிகள் எதுவும் தொடங்கவில்லை
இது குறித்து கேள்விகள் அவ்வப்போது எழுப்பப்பட்டு வந்த நிலையில் தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் தாமதம் ஆவதற்கு ஜப்பான் நிறுவனமே காரணம் என மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் பதிலளித்துள்ளார்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூபாய் ஆயிரத்து 264 கோடி ஒதுக்கி அதில் ரூபாய் 12 கோடி செலவிடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தாமதம் ஏன் என்ற திமுக எம்பி டி ஆர் பாலு அவர்களின் கேள்விக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் இவ்வாறு பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் அதே நேரத்தில் கடந்த ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு குஜராத்தில் அடிக்கல் நாட்டிய நிலையில் தற்போது அங்கு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
