1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 27 மே 2021 (12:58 IST)

மாணவிகள் பாலியல் புகார் அளிக்க தனி வாட்ஸ் அப் எண்: புகார்கள் குவிந்து வருவதாக தகவல்!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது அதிரடி நடவடிக்கை எடுத்ததை அடுத்து வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் பாதிக்கப்பட்டு இருந்தால் தாராளமாக புகார் கொடுக்க முன்வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து துணை ஆணையர் ஜெயலட்சுமி அவர்களின் வாட்ஸ்அப் எண் 94447-72222 அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி இருந்தால் தாராளமாக புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் இந்த எண் அறிவிக்கப்பட்டு ஒரு சில மணி நேரங்களில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து 30க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் புகார் அளித்துள்ளதாகவும் இந்த புகார்கள் பரிசீலனை செய்யப்பட்டு ஆசிரியர்கள் மீது தவறு இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரம் கூறியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.