1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Velacherry re election campaign allowed

வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு!- இன்று மட்டும் பிரச்சாரம் செய்ய அனுமதி!

Tamilnadu
வேளச்சேரியில் வாக்கு இயந்திரம் விவகாரத்திம் மீண்டும் அங்கு வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 6ம் தேதி நடந்து முடிந்தது. தேர்தல் வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட உள்ள நிலையில் வேளச்சேரியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்குப்பதிவு எந்திரத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் குறிப்பிட்ட அந்த வாக்குச்சாவடியில் மட்டும் நாளை மறுநாள் ஏப்ரல் 17ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இன்று காலை முதல் மாலை 7 மணி வரை அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
கும்பமேளாவில் 1000 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி!