தொடர்புடைய செய்திகள்
- ஹிஜாப் வழக்கு: 3 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரணை
- ஹிஜாப் சர்ச்சை: எங்களுடைய வீட்டு விஷயத்தில் தலையிட வேண்டாம் - ஒவைஸி
- மாணவர்களை தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: சரத்குமார் கோரிக்கை
- கல்வி நிறுவனங்களை மதங்களின் பெயரால் உருவாக்கியது சரியா? இயக்குனர் சீனு ராமசாமி கேள்வி!
- ஹிஜாப் வழக்கு: அதிக நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்த நீதிபதி
இஸ்லாம் இந்தியாவில்தான் சிறுபான்மை.. ஒடுக்க வேண்டாம்! – வைரமுத்து ட்வீட்!
கர்நாடகாவில் ஹஜாப் சர்ச்சை வலுவடைந்துள்ள நிலையில் அதுகுறித்து கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு பெண்கள் ஹிஜாப் அணிந்து செல்வதற்கான தடை மற்றும் அதை தொடர்ந்த போராட்டங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. அதை தொடர்ந்து ஹிஜாப் தடையை நீக்குவதை எதிர்த்து இந்து மாணவ அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியதால் இரு பிரிவினர் இடையே மோதல் எழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து “கல்வியின் நோக்கங்களுள் ஒன்று பிரிந்துகிடக்கும் சமூகத்தை ஒருகூரையின் கீழ் ஒன்றுபடுத்துவது; ஒன்றுபட்ட சமூகத்தை இரண்டுபடுத்துவது அல்ல ஆடை என்பது மானம்; எந்த ஆடை என்பது உரிமை இரண்டையும் பறிக்க வேண்டாம் இஸ்லாம் என்பது இந்தியாவில் தான் சிறுபான்மை ஒடுக்க வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
