தொடர்புடைய செய்திகள்
- அந்தக்காலம் போல் இந்தக்காலமும் மாறி விடாதா இறைவா.. நாங்குநேரி சம்பவம் குறித்து ராஜ்கிரண் ஆதங்கம்..!
- நாங்குநேரி சம்பத்தில் திமுக கண்டிக்க திராணியில்லை.. திருமாவளவன் குறித்து பாஜக பிரமுகர்..!
- நாங்குநேரி சம்பவத்திற்கு மாமன்னன் படம்தான் காரணம்: டாக்டர் கிருஷ்ணசாமி
- நாங்குநேரி ஜாதி பிரச்சினைக்கு திமுக தான் காரணம்: அண்ணாமலை அதிர்ச்சி தகவல்..!
- நாங்குநேரியில் 2 வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு..மீண்டும் ஒரு அசம்பாவிதம்..!
சாதியைக்கூட மன்னிக்கலாம், ஆனால்.. நாங்குநேரி விவகாரம் குறித்து வைரமுத்து..!
ஜாதியை கூட மன்னித்து விடலாம் ஆனால் அதற்கு இழிவு பெருமை கற்பித்தவனை மன்னிக்க முடியாது என கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நாங்குநேரியில் பட்டியல் இன மாணவர் ஒருவர் சக மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நாங்குநேரி சம்பவம் குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:
நாங்குநேரி சம்பவம்
நாட்டின் இதயத்தில்
விழுந்த வெட்டு
சாதியைக்கூட மன்னிக்கலாம்
அதற்கு
இழிவு பெருமை கற்பித்தவனை
மன்னிக்க முடியாது
சமூக நலம் பேணும்
சமூகத் தலைவர்களே!
முன்னவர் பட்ட பாடுகளைப்
பின்னவர்க்குச்
சொல்லிக் கொடுங்கள்
அல்லது
மதம் மாறுவதுபோல்
சாதி மாறும் உரிமையைச்
சட்டமாக்குங்கள்
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
