1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 டிசம்பர் 2022 (19:29 IST)

முன்னாள் அமைச்சர் மீதான இரண்டு வழக்குகளும் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

court
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் மீதான இரண்டு வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துளது.
 
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டனர். ஒரு வழக்கில் அவர் தேர்தல் வேட்புமனுவில் கல்வித் தகுதி குறித்து தவறான தகவலை தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்டது. 
 
இரண்டாவதாக 12ஆம் வகுப்பு படித்துள்ளதாக பொய்யான தகவல் தெரிவித்துள்ளதாகவும், முதியோர் இல்லம் நடத்துவதாக அரசு நிலத்தை  குத்தகைக்கு எடுத்து உள்வாடகைக்கு விட்டதாகவும் பதிவு செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ்  மீது பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகளையும் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
Edited by Mahendran