1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today Rain chances in Tamilnadu

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu
தமிழகத்தில் தென்மேற்கு பபருவக்காற்று காரணமாக கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் டெல்டா பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும், ஆகஸ்டு 12 வரை தமிழகத்தில் மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
நாய், மாடு வளர்த்தால் வரி கட்ட வேண்டும்: மாநகராட்சி அதிரடி அறிவிப்பு!