தொடர்புடைய செய்திகள்
- சிம்பு நடிப்பில் ‘பத்து தல’ ஷூட்டிங் எப்போது? வெளியான லேட்டஸ்ட் தகவல்!
- ஓடிடியில் வெளியானது மோகன் லால் – ஜீத்து ஜோசப்பின் 12th மேன்!
- 1 கிலோ தக்காளி ரூ.110-க்கு விற்பனை !!
- ரூ.10 கோடி மானநஷ்டம் கோரி வழக்கு: மதுரை தம்பதி மீது தனுஷ் தொடர்ந்ததால் பரபரப்பு
- இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு: 9 மணிக்குள் தேர்வு அறைக்கு செல்ல அறிவுறுத்தல்
டி.என்.பி.எஸ்.சி.: 12.45 மணிக்கு பிறகே வெளியில் வர அனுமதி!
தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வுகள் தொடங்கியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கு சமீபத்தில் விண்ணப்பம் பெறப்பட்டது. 5,529 பணிகளுக்கு 11 லட்சம் பேர் விண்ணப்பம் செய்தனர் என்பதும் இன்று 11 லட்சம் பேர் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் தேர்ந்த தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தேர்வு எழுத வரும் தேர்வர்கள் 8.59 மணிக்குள் தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும் என்றும் 9 மணிக்குள் மேல் வருபவர்களுக்கு வருபவர்கள் தேர்வு அறையில் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வுகள் தொடங்கியுள்ளது. 5,529 காலி இடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2ஏ தேர்வுகள் நடத்தப்படுகிறது. தேர்வு பகல் 12.30 மணிக்கு முடிந்தாலும் 12.45 மணிக்கு பிறகே தேர்வாளர்கள் வெளியில் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
