தொடர்புடைய செய்திகள்
- சூழ்ந்த மேகங்கள்; கொட்டும் கனமழை : தத்தளிக்கும் சென்னை
- வெள்ளத்தில் மூழ்கிய மெரினா! பீச் எது கரை எது என்று தெரியாத நிலையால் பரபரப்பு
- சென்னை கனமழை எதிரொலி: மாநில கல்லூரி, சட்டக்கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு
- கருணாநிதி இல்லத்தில் புகுந்த மழை நீர்: அமைச்சர் சொல்வது என்ன?
- சென்னையில் அதிகாலையிலும் தொடரும் மழை: இன்றைய இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது
தமிழகத்தை நோக்கி வரும் டெமிரி புயல்? - ரமணன் எச்சரிக்கை
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை மைய அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், முன்னாள் வானிலை மைய இயக்குனர் ரமணன் இதுபற்றி கருத்து தெரிவித்த போது “சென்னையில் ஏறக்குறைய 12 மணி நேரங்களாக மழை பெய்து வருகிறது. தற்போது ‘டெமிரி’ என்ற புயல் வியட்நாம் பகுதியில் உள்ளது. அந்தப் புயல் வங்கக் கடலை நோக்கி நகர்ந்தால் தமிழகத்தில் மேலும் அதிக மழை பொழிவு இருக்கும். குறிப்பாக வட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து நல்ல மழை பொழிவு இருக்கும். அதேபோல், தென் கடலோர மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
