1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TN Govt give boost marks to nurses who worked in corona time

கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஊக்க மதிப்பெண்: தமிழ்நாடு அரசு

செவிலியர்கள்
கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு, கிராம சுகாதார செவிலியர் நியமனத்தில் ஊக்க மதிப்பெண் அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அனைத்து வகையான அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா கேர் மையங்களில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கப்படும் என்றும், 6 முதல் 12 மாதம் வரை பணியாற்றியவர்களுக்கு 2 மதிப்பெண், 12 முதல் 18  மாதம்  வரை பணியாற்றியவர்களுக்கு 3  மதிப்பெண் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் 18 முதல் 24  மாதம் வரை பணியாற்றியவர்களுக்கு 4  மதிப்பெண், 24 மாதங்களுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு 5 மதிப்பெண்கள் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

2250 கிராம சுகாதார செவிலியர்களை நியமனம் செய்வது தொடர்பான அறிவிப்பை மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
பெட்ரோல் டேங்கில் உட்கார்ந்து கணவனை கட்டிப்பிடித்தபடி பைக்கில் பயணம்.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!