தொடர்புடைய செய்திகள்
- தினகரனுடன் சந்திப்பு : பன்னீரின் பதவியை பறிக்க திட்டமிடும் எடப்பாடி?
- ஓபிஎஸ்-தினகரன் பரபரப்புக்கு இடையே டெல்லி செல்லும் ஈபிஎஸ்
- தர்மயுத்தமா அல்லது தர்மசங்கட யுத்தமா? –ஓபிஎஸ், தினகரனை கலாய்க்கும் தமிழிசை
- இங்கு ஓபிஎஸ் பேட்டி, அங்கு ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு
- தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் –பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்
ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருதா? - கொதிக்கும் நெட்டிசன்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது அளிக்கப்பட வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்திருப்பது கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென்றும், சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது கேட்பது தவறான முன்னுதாரணம் என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
