1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TN Exam board add language of study in marklist

பள்ளி மதிப்பெண் சான்றிதழில் பயிற்று மொழி சேர்ப்பு! – தேர்வுத்துறை இயக்குநர் அறிவிப்பு!

Tamilnadu
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பயிற்று மொழியை சேர்க்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு பணியில் 20% இட ஒதுக்கீடு என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்களின் பயிற்று மொழி குறித்த விவரங்களை அறிவதற்காக நடப்பு கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மாணவர்களின் பயிற்று மொழி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 10ம் வகுப்பு வரை வகுப்புவாரியாக மாணவர்கள் எந்த பயிற்று மொழியில் பயின்றனர் என்பது அதில் இடம்பெறும் என்றும், மாணவர்களின் பயிற்று மொழி விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் இணையத்தில் பதிவேற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஒரே நாளில் 18 லட்சம் பேருக்கு தடுப்பூசி