1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Ticket booking for trains in Tamil Nadu started

தமிழகத்தில் துவங்கியது பயணிகள் ரயில் முன்பதிவு!

#TamilNadu
தமிழகத்தில் வெளியூர் செல்வதற்கான 13 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு துவங்கியது
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக பேருந்து போக்குவரத்து மாவட்டங்களுக்கு இடையே தொடங்கப்பட்டது.    
 
அதோடு செப்டம்பர் 7 முதல் மாநிலம் முழுவதும் பேருந்துகள் மற்றும் பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றன. அதன்படி தமிழகத்திற்கு 9 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்து ரயில் விவரங்களை வெளியிட்டது. அதன் பின்னர் கூடுதலாக மேலும் 4 சிறப்பு ரயில் சேவைகள் வழங்குவதாக நேற்று அறிவிப்பு வெளியாகியது. 
 
இந்நிலையில் மொத்தம் 13 ரயில்கள் இயங்க உள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை துவங்குகிறது. பயணிகள் பயண நேரத்திற்கு 90 நிமிடங்கள் முன்னதாக ரயில் நிலையம் வர வேண்டும் மேலும் கொரோனா இல்லாதவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
அரியர் மாணவர்கள் தேர்ச்சி அறிவிப்பு - செல்லுமா? செல்லாதா?