1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. The thief comes to steal disappointed and write a letter

உசுற பணயம் வைச்சு திருட வந்தா... கல்லாவ தொடச்சு வைச்சுருக்க..ஏமாற்றத்தில் திருடனின் கடிதம் !

kadallore
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள மாதக்குப்பத்தில் மளிகை கடை நடத்திவருபவர் ஜெயராஜ் ( 65). இவர் இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இன்று காலையில் வந்து கடையைப் பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தது. 
கடையின் மேற்கூரை உடைந்து உள்ளே நுழைந்த திருடன் ,கல்லாவில் பணம் இல்லாததைக் கண்டு பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளான். அத்துடன் தன் கைப்பட ஒரு கடித்தம் எழுதி வைத்து அங்கிந்த பொருட்களை அடித்து உடைத்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளான்.
 
அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது :
 
உயிரைப் பணயம் வைச்சு திருட வந்தா காசு இல்லாம கல்லாவ தொடச்சு வைச்சு என்னை ஏமாற்றலாமா..அதுக்குத்தான் இந்த குரங்கு வேலை என எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.
 
பின்னர் இதுகுறித்து கடைக்காரர் போலீஸிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அடுத்த கட்டுரையில்
தப்பு செஞ்சா பாத்ரூமில் விழுந்து கை உடையும்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு