வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 18 மார்ச் 2019 (12:58 IST)

3 மாத குழந்தையைக் கொன்ற தந்தை : திடுக்கிடும் சம்பவம்

சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி அருகே உள்ள சேசன்வாசடி கிழக்குக்காடு பகுதியில்  வசிப்பவர் கேசவன். இவருக்கு அபிராமி என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு 3 மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனால் மனைவி தன் தாய் வீட்டில் இருந்துள்ளார்.
இதனையடுத்து தன் வீட்டிற்கு   வருமாறு மனைவியை கேசவன் அழைத்துள்ளார். ஆனால் அபிராமி புகுந்தவீட்டிற்கு திரும்பி செல்ல மறுத்துள்ளார் எனத் தெரிகிறது.
 
இந்நிலையில்  மனைவி வராததால் ஆவேசமடைந்த கேசவன் தன் குழந்தையை எடுத்துசென்று பச்சை குழந்தை என்றும் பாராமல் அதை துணியை அழுத்தி கொன்றுள்ளார்.
 
பின்னர் அபிராமி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் கேசவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.