1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. The cave lane will be open for public use next week MR Vijayapaskar

அடுத்த வாரம் குகை வழிப்பாதை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும் - எம்.ஆர் . விஜயபாஸ்கர்

எம்ஆர்விஜயபாஸ்கர்
கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதை  தடுக்கும்  விதமாக  மழைநீர்  வடிகால் அமைக்கும் பணி  ரூபாய் சுமார் 13 கோடி இல் அமைக்கப்பட்டுள்ளது என்று கரூரில் தமிழக போக்குவரத்து துறை எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி.
கரூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுளத்துப்பாளையம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி ரூ 150 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டதோடு., மாரியம்மன் கோயில் முதல் திருச்சி ரோடு வரை மழைநீர் வடிகால் அமைத்தல் பணி ரூ 155 லட்சம் என்று சுமார் 7 கோடியே 29 லட்சம் மதிப்பிலான பணிகள் முடிவடைந்த நிலையில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து பெரியகுளத்துப்பாளையம் குகைவழிப்பாதை அமைக்கப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் நிலையில், அதனையும் ஆய்வு செய்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.,செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்., மழைக் காலங்களில் கரூர் நகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்குவதால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பொதுமக்களை காக்கும் விதமாக, மழைநீர் வடிகால் கால்வாய் ரூபாய் சுமார் 13- கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் குளத்துப்பாளையம் பகுதியில் ரூபாய் 3 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ரயில்வே குகைவழி பாதை பணிகள் நிறைவுறும் நிலையில் உள்ளது. அடுத்த வாரம் குகை வழிப்பாதை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும். இதன்மூலம் நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் வாய்ப்பாக அமையும் என்றார். பேட்டியின் போது கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
 
 
அடுத்த கட்டுரையில்
கம்பி வேலியை அலேக்காக தாண்டிய முதலை – ட்ரெண்ட் ஆன வீடியோ