1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 14 மே 2020 (11:07 IST)

அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்க: ஐகோர்ட்டுக்கு டாஸ்மாக் பதில்!

மதுக்கடைகளுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய டாஸ்மாக் கோரிக்கை. 
 
தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் நேற்று வெளியான தகவலின்படி தமிழகத்தில் 509 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.  
 
இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9227 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 509 பேர்களில் சென்னையில் மட்டும் 380 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5262 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்கு திறக்கப்பட்ட கடைகளை சென்னை உயர்நீதிமன்றம் மூட உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. 
 
டாஸ்மாக் திறக்கப்படகூடாது என பல வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைகளில் நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க முடிவு செய்துள்ளோம் என சென்னை உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு டாஸ்மாக் பதிலளித்துள்ளது. 
 
அதோடு, மதுக்கடைகளுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளது.