தொடர்புடைய செய்திகள்
- டாஸ்மாக்கில் பீர் வாங்கிய இளம்பெண்ணை தாக்கிய வாலிபர்கள்
- டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: கடலூரில் பரபரப்பு
- தெருவுக்கு தெரு டாஸ்மாக் ; நீட் தேர்வு மையம் அமைக்க முடியாதா? - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்
- இனிமேல் குடிக்க மாட்டேன் - தற்கொலை செய்த மாணவரின் தந்தை உருக்கம்
- நீட் தேர்வு எழுதவிருந்த நெல்லை மாணவர் திடீர் தற்கொலை:
டாஸ்மாக் ஊழியர்களின் பிரச்சினை தீருமா ?
மின் துறை அமைச்சர் தான் எங்கள் டாஸ்மாக் துறைக்கும் அமைச்சராக உள்ளார். அவரிடம் இரண்டாண்டுகளாகியும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு இதுநாள் வரை நிறைவேற்றப்பட வில்லை – என தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க சிறப்புத்தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சிறப்புத்தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவ்து:-
15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு இதுவரை பணி நிரந்தரம் செய்யப்பட வில்லை, காலமுறை ஊதிய விகிதம் வழங்கப்படவில்லை, மேலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சமூகத்தில் பாதுகாப்பு என்பது அவர்களை பொறுத்தவரை அச்சுறுத்தலாகி உள்ளது. உயிரிழந்த டாஸ்மாக் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலையோ., இழப்பீடும் இதுவரை வழங்கப்படுவதில்லை, இது போன்ற 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பல போராட்டங்களை நடத்தியும், அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை.
சி.ஆனந்தகுமார்
அடுத்த கட்டுரையில்
