தொடர்புடைய செய்திகள்
- மழையால் சேதமான டெல்டா விவசாயம்! – ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு அமைப்பு!
- எல்லா விமானமும் நேரத்திற்கு இயக்கப்படுகிறது! – சென்னை விமான நிலையம் தகவல்!
- மழையும் இல்ல.. லீவும் இல்ல..! – விஜய் ரசிகருக்கு விருதுநகர் கலெக்டரின் விருவிருப்பான ட்வீட்
- சென்னை பள்ளிக்கரணையில் வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்!
- தீவிரமடையும் பருவமழை.. சிக்கலில் மக்கள் – முதல்வர் திடீர் ஆலோசனை!
நாளை முதல் நீலகிரி, கோவையில் கனமழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!
வங்க கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் நிலையில் நாளை முதல் தென் தமிழக பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக வலுவடைந்த நிலையில் இன்று சென்னை அருகே கரையை கடக்கிறது. இந்நிலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு கன்னியாக்குமரி, நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
