தொடர்புடைய செய்திகள்
- கொரோனா வைரஸ் தொற்றுக்கு மற்றொரு உயிர் காக்கும் புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு
- ஊரடங்கு மேலும் நீட்டிப்பு; 3 வகையாக பிரித்து தளர்வுகள்! – தமிழக அரசு அறிவிப்பு!
- பயிற்சி வகுப்பு நடத்தி கொரோனா நிதி திரட்டிய இயக்குனர் சுசீந்திரன்! – உதயநிதியிடம் வழங்கினார்!
- அதிமுக செஞ்ச தப்பை செய்யாதீங்க.. வெள்ளை அறிக்கை வேணும்! – சீமான் அறிக்கை!
- நான்கு விதமானவர்களுக்கு நான்கு கலர்களில் இலவச டிக்கெட்! – தமிழக அரசு
தமிழகத்தை அதிகம் பாதித்த டெல்டா கொரோனா வைரஸ்! – சுகாதாரத்துறை தகவல்!
தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவலில் அதிக அளவில் டெல்டா வகை கொரோனா பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இரண்டாம் அலை கொரோனா அதிகளவில் பரவ இந்தியாவில் உறுமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா வைரஸே காரணம் என வல்லுனர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் 554 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 386 பேருக்கு டெல்டா கொரோனா வைரஸ் பரவியது தெரிய வந்துள்ளது. மொத்த பரிசோதனையில் இது 75%க்கும் அதிகம் என்றும், இதில் அதிகம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
