வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 18 மார்ச் 2018 (12:29 IST)

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பாஜக நிறைவேற்றும் - தமிழிசை

உச்ச நீதிமன்ற தீர்ப்பை பாஜக நிறைவேற்றும் என்றும் வரும் 30ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

 
காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி அதிமுக கட்சியினர் பாஜகவை வெளிப்படையாக எதிர்த்து வருகின்றனர். தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக பாஜக கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. தமிழக உரிமையை மீட்க பாஜக உறுதுணையாக இருக்கும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருந்தார்.
 
மத்திய நீர்வளத்துறை செயலாளர் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து தமிழக சட்டசபையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
மத்திய அரசு காவிரி மேலாண்மை அமைக்க எந்த ஒரு நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முன்வராது என்பது தெளிவாக தெரிந்தது.
 
இந்நிலையில் தற்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை, உச்ச  நீதிமன்ற தீர்ப்பை பாஜக நிறைவேற்றும் என்றும் வரும் 30ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.