தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் நம்ம ஊரு திருவிழா! – மூன்று நாள் கலை நிகழ்ச்சிக்கு திட்டம்!
- புத்தாண்டு கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும்! – பொதுமக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்!
- ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கல்...? அதிமுகவினரிடம் விசாரணை!
- சென்ச்சூரியனில் இன்று மழைக்கு வாய்ப்பு இருக்கா?
- சென்ச்சூரியனில் இன்று மழைக்கு வாய்ப்பு இருக்கா?
தமிழகத்தில் 30 ஆம் தேதி வரை மழை!!
தமிழகத்தில் 30 ஆம் தேதி வரை கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தகவல்.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலாக வடகிழக்கு பருவக்காற்றால் தொடர் மழை பெய்து வந்தது. மேலும் வங்க கடலில் தொடர்ந்து அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் பல மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிகமான மழை பொழிந்தது. கடந்த சில நாட்களாக புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகாத நிலையில் மிதமான அளவில் மழை பெய்து வந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் 30 ஆம் தேதி வரை கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
