1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 18 ஜூன் 2023 (16:37 IST)

தமிழ்நாட்டில் விரைவில் பிராமணர்களுக்கு என அரசியல் கட்சி: எஸ்.வி சேகர் பேட்டி

தமிழ்நாட்டில் விரைவில் பிராமணர்களுக்கு என அரசியல் கட்சி தொடங்கப்படும் என நடிகர் மற்றும் பாஜக பிரமுகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார். 
 
தமிழ்நாட்டில் பிராமணர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்த கட்சி தொடங்கப் போவதாகவும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மற்றும் புதுச்சேரி என 33 தொகுதிகளில் போட்டியிடப் போவதாகவும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் எங்கள் கட்சிக்கு பிராமணர்கள் மட்டும் வாக்களித்தால் போதும் என்றும் தமிழகத்தில் உள்ள பிராமணர்களின் எண்ணிக்கை அதன் மூலம் தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
கட்சி தொடங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போது நான் மோடியிடம் சென்று பாஜகவில் இருந்து விலகும் முடிவை அறிவிப்பேன் என்றும் என்னால் இரட்டை குதிரைகளில் பயணம் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார். 
 
 
Edited by Siva