திங்கள், 2 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 15 ஜனவரி 2022 (22:22 IST)

தடுப்பூசி போடாத மாணவர்களுக்கு அனுமதி இல்லை - அரியானா அரசு

தடுப்பூசி போடாத மாணவர்களுக்கு அனுமதி இல்லை - அரியானா அரசு
இந்தியாவில் கொரொனா 3 வது அலை வேகமானப் பரவி வரும் நிலையில், இதைத் தடுக்க மத்திய அரசு மா நில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

கொரொனா பரவல் அதிகரித்து வரும்  நிலையில் அரியானா  மாநிலத்தில் தடுப்பூசி போடாத 15 வயது முதல் 18 வயதுவரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை என அம் மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்துமாறு அம்மா நில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.