தொடர்புடைய செய்திகள்
- கல்லூரி சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய அரசின் ஸ்காலர்ஷிப்! – உயர்கல்வித்துறை அறிவிப்பு!
- காய்கறி வாங்கினால் தக்காளி, தேங்காய் இலவசம்...மக்கள் மகிழ்ச்சி
- அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் கோரிக்கை
- வன்முறையில் இறங்கினால் இனிமே கைதுதான்..! – மாணவர்களுக்கு கமிஷனர் எச்சரிக்கை!
- வீட்டை வாடகை எடுத்து கஞ்சா விற்பனை! – கல்லூரி மாணவர்கள் கைது!
புகார் அளிக்க வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய மாணவர்கள்!
சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் இரு பிரிவினர் ஓட்டலுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா துரைசிங்கம் கலை அறிவியல் கல்லூரியில் பிஏ., வரலாற்றுப் பாடம் படித்து வரும் பொன் சக்தி, அக்னிராஜ் ஆகிய இரு பிரிவினருக்கு ஏற்கனவே கடந்த மாதம் மோதல் இருந்து வந்த நிலையில், கல்லூரி முதல்வர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் மீண்டும் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில், பொன் சக்தி தன் தந்தை நண்பர்களுடன் வந்து அக்னிராஜ் தரப்பினருடன் சமாதானம் பேச வந்துள்ளனர். அப்போது இவர்களை அக்னிராஜ் தரப்பினர் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து, புகார் அளிக்க , பொன் சக்தி தரப்பினர் காவல் நிலையம் சென்றபோது, காவலர்கள் இல்லாததால், அவர்கள் ஓட்டலில் சாப்பிட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த அக்னிராஜ் தரப்பினர் அவர்களைத் தாக்கியதுடன், வாகனத்தையும் அடித்து நொறுங்கினர்.
இன்று பகலில், புகார் அளிக்க வந்தவர்களை, ஒரு ஓட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Edited by Sinoj
அடுத்த கட்டுரையில்
