1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. student rape and murder case: Investigation officer transferred

தர்மபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: திடீரென மாற்றப்பட்ட விசாரணை அதிகாரி

தர்மபுரி
தர்மபுரியில் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்த வழக்கை விசாரணை செய்து வந்த, விசாரணை அதிகாரி திடீரென மாற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர்  என்ற பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவரை சதீஷ் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் பாலியல் வன்கொடுமை செய்தனர். அதன்பின்னர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த மாணவி, சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

இதனையடுத்து கொலை வழக்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் சதிஷ், ரமேஷ் ஆகிய இருவரையும் தீவிரமாக போலீசார் தேடி வந்தனர். முதலில் தலைமறைவான சதீஷை தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில் இன்று ரமேஷும் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்து வந்த கோட்டப்பட்டி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் என்பவர் திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அரூர் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் லட்சுமி என்பவர் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
பாஜகவின் ஊதுகுழல் அதிமுக என்பது உண்மைதான்: ஓபிஎஸ்